Published : 01 Jul 2020 06:35 PM
Last Updated : 01 Jul 2020 06:35 PM

தமிழகத்தில் இன்று புதிதாக 3,882 பேருக்கு கரோனா: தொற்று எண்ணிக்கை 95 ஆயிரத்தை நெருங்கியது; சென்னையில் 2,182 பேர் பாதிப்பு

தமிழகத்தில் கரோனா தொற்று குறித்த இன்றைய நிலவரம்

சென்னை

தமிழகத்தில் இன்று புதிதாக 3,882 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94,049 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் 2,182 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 60,333 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று குறித்த இன்றைய (ஜூலை 1) நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட விவரங்கள்:

''தமிழகத்தில் இன்று புதிதாக 3,882 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94,049 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 31 ஆயிரத்து 521 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக, 12 லட்சத்து 2,204 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இன்று மட்டும் 30 ஆயிரத்து 571 தனிநபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மொத்தமாக, 11 லட்சத்து 47 ஆயிரத்து 193 தனிநபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சையில் குணமடைந்து இன்று மட்டும் 2,852 பேர் வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக, 52 ஆயிரத்து 926 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 39 ஆயிரத்து 856 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரசு மருத்துவமனைகளில் 37 பேர், தனியார் மருத்துவமனைகளில் 26 பேர் என மொத்தம் 63 பேர் இன்று கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 1,264 ஆக உயர்ந்துள்ளது. இன்று பதிவான உயிரிழப்புகளில் 55 பேர் ஏற்கெனவே இணை நோய்கள் உள்ளவர்களாவர். 8 பேருக்கு இணை நோய்கள் இல்லை.

இன்று அதிகபட்சமாக சென்னையில் 2,182 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 60,333 ஆக அதிகரித்துள்ளது.

அரசு சார்பாக 48 மற்றும் தனியார் சார்பாக 43 என, மொத்தம் 91 கரோனா பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன''.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x