Published : 01 Jul 2020 07:12 AM
Last Updated : 01 Jul 2020 07:12 AM
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 462 போலீஸார் பணிக்கு திரும்பியுள்ளனர்.
கரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணியில் காவலர் களும் ஈடுபட்டுள்ளனர். குறிப் பாக வாகன சோதனை, வைரஸ் தொற்றால் பாதிக் கப்பட்டவர்கள் தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணியில், அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், அவர்களுக் கும் வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. அதன்படி, சென்னையில் நேற்று மேலும் 26 காவலர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து கரோனாவால் பாதிக்கப்பட்ட போலீஸாரின் எண்ணிக்கை 1,155 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், 462 போலீ ஸார் வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி பணிக்கு திரும்பியுள்ளனர். மேலும், தமிழகம் முழு வதும் 117 தீயணைப்பு வீரர் களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு அதில் 71 வீரர்கள் குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT