

முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சென்னை, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்றுமுதல் 4-ம் தேதிவரை வங்கிகளில் பொதுமக்களுக்கான சேவை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், மேற்கண்ட 5 மாவட்டங்களில் உள்ள வங்கிக் கிளைகள் இன்று (ஜூலை 1) முதல் 4-ம்தேதி வரை 33 சதவீத ஊழியர்களுடன் காலை 10 மணி முதல் மதியம்2 மணி வரை செயல்படும். பெட்ரோல் பங்க்குகள், சமையல் காஸ் சிலிண்டர் விநியோகிக்கும் ஏஜென்சிகள் ஆகியவற்றுக்கான பரிவர்த்தனை மற்றும் ஏடிஎம்களில் பணம் நிரப்புவது உள்ளிட்டஅத்தியாவசிய சேவை மட்டுமேநடைபெறும். பொதுமக்களுக்கு நேரடி வங்கி சேவை கிடையாது என மாநில அளவிலான வங்கியாளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.சி.மொகந்தா தெரிவித்துள்ளார்.