Published : 01 Jul 2020 06:56 AM
Last Updated : 01 Jul 2020 06:56 AM

மத்திய அரசுக்கான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக ஆர்.சங்கரநாராயணன் நியமனம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கான புதிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் ஆர்.சங்கரநாராயணனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்த ஜி.ராஜகோபாலனின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதையடுத்து அவருக்குப் பதில் புதிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஆர்.சங்கரநாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x