Published : 30 Jun 2020 07:01 AM
Last Updated : 30 Jun 2020 07:01 AM
வடசென்னை வியாசர்பாடியில் வசித்து வந்தவர் எம்.ஆதிகேசவன் (65). எப்போதும் தங்க சங்கிலி, பெரிய மோதிரங்கள் உள்ளிட்ட நகைகளை அணிவதால் பிரபலமடைந்தார்.
வழக்கறிஞரான இவர், அகில இந்திய டாக்டர் அம்பேத்கர் எஸ்சி, எஸ்டி நல கூட்டமைப்பு தேசிய தலைவராகவும், இந்திய குடியரசு கட்சி (அ) மூத்த துணை தலைவராகவும் இருந்தார். சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல்,இருமல் இருந்ததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் உயிரிழந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT