Last Updated : 27 Jun, 2020 05:36 PM

 

Published : 27 Jun 2020 05:36 PM
Last Updated : 27 Jun 2020 05:36 PM

கிராமங்களில் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த ஆயிரம் கி.மீ. பின்னோக்கி நடக்கும் ராணுவ வீரர்

சிவகங்கை மாவட்டத்தில் கிராமங்களில் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த மானாமதுரைச் சேர்ந்த ராணுவ வீரர் ஆயிரம் கி.மீ. பின்னோக்கி நடந்து செல்கிறார்.

மானாமதுரையைச் சேர்ந்தவர் பாலமுருகன் (43). ராணுவவீரரான இவர், தற்போது விடுமுறையில் உள்ளார். தற்போது நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.

இதை தடுப்பது குறித்து கிராமமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இதனை உலக சாதனையாக மாற்றும் முயற்சியாகவும் பின்னோக்கி நடக்க முடிவு செய்தார்.

இதற்காக அவர் சிவகங்கை மாவட்டத்தில் 10 நாட்களில் ஆயிரம் கி.மீ., பயனித்து பல நூறு கிராமமங்களுக்கு செல்கிறார். தினமும் 100 கி.மீ., பின்னோக்கி நடந்தே செல்கிறார்.

சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம், வைகை பட்டாளம் சார்பில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஜெ.ஜெயகாந்தன் தொடங்கி வைத்தார்.

இதில் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத் தலைவர் நிமலன் மற்றும் ராணுவவீரர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x