Published : 22 Jun 2020 04:29 PM
Last Updated : 22 Jun 2020 04:29 PM

சில மாவட்டங்களில் மிதமான மழை, 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தென் மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் லேசான மழையும், 3 மாவட்டங்களில் கன மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனத்தின் காரணமாக தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஷையும் , குறைந்த பட்சம் 28 டிகிரி செல்சியஷையும் ஒட்டியிருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை விவரம், வால்பாறை (கோவை) சோலையாறு(கோவை) 6 செ.மீ, சின்னகல்லார் (கோவை) சின்கோனா (கோவை) தலா 5 செ.மீ., தேவாலா (நீலகிரி) தேவகோட்டை (சிவகங்கை) திருவள்ளூர், பூந்தமல்லி (திருவள்ளூர்) தலா 3 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை, ஜூன் 22 அன்று தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் லட்ச தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஜூன் 24 முதல் 26 வரை கர்நாடக கேரள கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

ஜூன் 22 முதல் 26 வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் மத்திய கிழக்கு கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்”.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x