சிவகங்கை மாவட்டத்தில் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் உட்பட 35 பேருக்கு கரோனா

சிவகங்கை மாவட்டத்தில் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் உட்பட 35 பேருக்கு கரோனா
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் உட்பட 35 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் தொடக்க காலத்தில் 12 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, அனைவரும் குணமடைந்தனர். தொடர்ந்து வெளிமாநிலங்கள் மற்றும் சென்னையில் இருந்து வருவோரை சுகாதாரத்துறையினர் பரிசோதித்து வருகின்றனர். இதுவரை 180-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று மட்டும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் சிவகங்கை, காரைக்குடி, இளையான்குடி, மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 35 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டது.

அவர்கள் சிவகங்கை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in