அவிநாசி அருகே விளைநிலத்தின் நடுவே தானியக் குதிர் கண்டுபிடிப்பு

விளை நிலத்தின் நடுவே கண்டு பிடிக்கபட்ட தானியக் குதிர்.
விளை நிலத்தின் நடுவே கண்டு பிடிக்கபட்ட தானியக் குதிர்.
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகேயுள்ள கருவலூர் ராமநாதபுரத்தில் தொன்மையான தானியக் குதிர் கண்டறியப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்- கானூர் சாலையில், கருவலூர் கருணாகர வெங்கட்ரமணப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இங்கு உழவுப் பணி மேற்கொண்டபோது, நிலத்தின் மையப் பகுதியில் பழமையான தானியக் குதிர் தென்பட்டுள்ளது. சுமார் 8 அடி உயரம், 5 அடி அகலம் கொண்ட தானியக் குதிர், முற்காலத்தில் தானியங்களை சேமித்து வைத்து, தேவையானபோது பயன்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து வந்த தொல்லியல் துறையினர், இந்த தானியக் குதிர் எந்த காலகட்டத்தைச் சேர்ந்தது என்பது தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in