சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 13 பேருக்கு பாதிப்பு: 15 பேர் குணமடைந்தனர்

சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 13 பேருக்கு பாதிப்பு: 15 பேர் குணமடைந்தனர்
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டத்தில் பெண் லேப் டெக்னீசியன் உட்பட 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அதேவேளையில் இன்று ஒரே நாளில் 15 பேர் குணமடைந்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில் தொடக்கத்தில் 12 பேர் பாதிக்கப்பட்டு, அனைவரும் குணமடைந்தனர். அதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா, மேற்குவங்கம், குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் சென்னையில் இருந்து வருவோரை சுகாதாரத்துறையினர் பரிசோதித்து வருகின்றனர்.

இதில் சென்னையில் இருந்து வந்தோர் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இந்நிலையில் நேற்று சிவகங்கை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பெண் லேப் டெக்னீசியன் உட்பட சிவகங்கை, திருப்பத்தூர், நாட்டரசன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் நேற்று ஒரே நாளில் 15 பேர் குணமடைந்தனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன், மருத்துவ கல்லூரி டீன் ரத்தினவேல், நிலைய மருத்துவ அலுவலர்கள் மீனா, முகமதுரபீக் வீட்டிற்கு வழியனுப்பி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in