Last Updated : 16 Jun, 2020 04:34 PM

 

Published : 16 Jun 2020 04:34 PM
Last Updated : 16 Jun 2020 04:34 PM

நெல்லை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 500-ஐ கடந்தது

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 500-ஐ கடந்தது.

மகராஷ்டிரா போன்ற வெளிமாநிலங்கள், சென்னை போன்ற வெளிமாவட்டங்களில் இருந்து வந்து கொண்டிருப்போரால் நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த ஒரு வாரமாகவே பாதிப்பு எண்ணிக்கை இரட்டை இலக்கமாக இருந்துவந்தது. இன்று காலை நிலவரப்படி திருநெல்வேலி மாநகரில் 10 பேரும், புறநகரில் 3 பேருமாக மொத்தம் 13 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களில் 5 பேர் மகராஷ்டிராவிலிருந்தும், ஒருவர் சென்னையிலிருந்துந்தும் வந்தவர். மாவட்டத்தில் நேற்று வரையில் பாதிப்பு எண்ணிக்கை 489 ஆக இருந்த நிலையில் இன்று மேலும் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து மொத்த பாதிப்பு 502 ஆக உயர்ந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x