Published : 16 Jun 2020 07:49 AM
Last Updated : 16 Jun 2020 07:49 AM

கரோனா அறிகுறி இருந்த இளைஞர் உயிரிழப்பு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூரைச் சேர்ந்த 28 வயது இளைஞர், சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சென்னையிலிருந்து கோவை வந்தவருக்கு சளி, காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும், உடல்நிலை மோசமானதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில், தீவிர மூச்சுத்திணறல் வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், கரோனாவாக இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டதால் நேற்று முன்தினம் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால், வழியிலேயே உயிரிழந்தார்.

அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவரின் பயண விவரம் உள்ளிட்டவவை குறித்து சுகாதாரத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x