பணி நிரந்தரம் கோரி செப்.16 முதல் தொடர் போராட்டம்: திருக்கோயில் பணியாளர்கள் அறிவிப்பு

பணி நிரந்தரம் கோரி செப்.16 முதல் தொடர் போராட்டம்: திருக்கோயில் பணியாளர்கள் அறிவிப்பு
Updated on
1 min read

பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி அறநிலையத் துறையின் கீழுள்ள கோயில்கள் முன்பாக கோஷங்களை எழுப்பும் போராட்டத்தை நடத்தவுள்ளதாக தமிழ்நாடு திருக்கோயில் பணியாளர் கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப் பின் தலைவர் ஈஸ்வரன் கூறிய தாவது:

தமிழ்நாடு திருக்கோயில் பணி யாளர்கள் சங்கங்களின் கூட்டமைப் புக்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் நடத்தப்பட்டது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் களில் பணிபுரியும் 8 ஆயிரத்து 184 பேர் பணி நிரந்தரம் செய்யப்படு வார்கள் என்று முதல்வர் சட்டப் பேரவையில் அறிவித்தார்.

ஆனால், அது இன்னமும் செயல்படுத்தப் படாமல் உள்ளது. மேலும், 5 ஆண்டு களாக பதவி உயர்வும் வழங்கப் படவில்லை, தர ஊதியமும் தரப்பட வில்லை. இதனைக் கண்டித்து கடந்த 9-ம் தேதி முதல் கோரிக்கை அட்டை அணிந்து பணிக்கு செல் கிறோம்.

இதையடுத்து கோயில் வாசல் களில் வரும் 16-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை தினமும் கோஷம் போடு கிற போராட்டத்தை நடத்தவுள் ளோம். பின்னர் அறநிலையத்துறை ஆணையரை சந்தித்து வரும் 23-ம் தேதி மனு கொடுக்கவுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in