Published : 14 Jun 2020 04:20 PM
Last Updated : 14 Jun 2020 04:20 PM

கரோனா தொற்றைத் தடுக்க வலிமையான 5 வழிமுறைகள்; தமிழக அரசின் விழிப்புணர்வு வீடியோ

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய 5 வழிமுறைகளை தமிழக அரசு வீடியோவாக வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக, தமிழக அரசின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை இன்று (ஜூன் 14) ட்விட்டரில் வெளியிட்ட வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"கோவிட் 19-ஐ தவிர்க்க வலிமையான 5 வழிமுறைகள்:

1. வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணியவும்.

2. அடிக்கடி கைகளை சோப்பால் கழுவவும்.

3. மற்றவர்களிடமிருந்து குறைந்தபட்சம் 6 அடி பொது இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

4. நீரிழிவு/ரத்த அழுத்தம் அல்லது இதயநோய் இருப்பின் அதற்கான தொடர் சிகிச்சை பெறவும்.

5. இடைவெளியைக் கடைப்பிடித்து வயதானவர்களைக் காக்கவும்.

இந்த 5 வழிமுறைகளை நினைவில் கொள்ளவும், கோவிட் 19 இல்லாமல் வாழவும்.

பாதுகாப்பை கடைப்பிடியுங்கள், பயமின்றி வாழுங்கள்.

இருமலுடன் கூடிய காய்ச்சல் அல்லது மூச்சுத்திணறல் இருந்தால் உங்கள் அருகாமையிலுள்ள மருத்துவ நிலையத்தை அழைக்கவும். 104 அல்லது 044-2951 0500 என்ற எண்ணுக்கு அழைக்கவும்"

இவ்வாறு அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x