சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 13 பேருக்கு கரோனா 

சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 13 பேருக்கு கரோனா 
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் தொடக்கத்தில் 12 பேர் பாதிக்கப்பட்டு, அனைவரும் குணமடைந்தனர்.

அதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா, மேற்குவங்கம், குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் சென்னையில் இருந்து வருவோரை சுகாதாரத்துறையினர் பரிசோதித்து வருகின்றனர்.

அவர்களில் ஏற்கெனவே 62 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று சென்னையில் இருந்து வந்த நாட்டரசன்கோட்டையைச் சேர்ந்த 4 பேர், காரைக்குடி, மேலக்கடம்பன்குடி, சிவகங்கை, கீழாயூர், கல்லல், காளையார்கோவில், பஞ்சனூர், கண்ணமங்கலம், திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த தலா ஒருவர் என 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in