

சென்னை மாநகராட்சி தலைமை யிடம் மற்றும் 15 மண்டல அலுவலகங்களில் அமைக்கப்பட்ட அரசு இ-சேவை மையங்கள் மூலம் 38 ஆயிரத்து 14 பேரிடம் இருந்து ரூ. 15 கோடியே 83 லட்சத்து 97 ஆயிரத்து 169 சொத்துவரி வசூலிக்கப்பட்டுள்ளதாக அரசு கேபிள் டிவி நிறுவனம் தெரிவித் துள்ளது.
இதுகுறித்து அரசு கேபிள் டிவி மேலாண் இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில், தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் தலைமைச் செயலகம், 264 வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்கள், 54 கோட்ட அலுவலகங்கள் மற்றும் சென்னை மற்றும் மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் என 337 இடங்களில் அரசு இ-சேவை மையங்கள் அமைக் கப்பட்டுள்ளன.
இந்த சேவை மையங்கள் மூலம் வருவாய், ஜாதி, இருப்பிட சான்றிதழ்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்று, முதல் தலைமுறை பட்டதாரி சான்று, முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், திருமண நிதி உதவி திட்டங்கள் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இச்சேவை மையங்கள் மூலம் இதுவரை 13 லட்சத்து 28 ஆயிரத்து 647 மனுக்கள் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது தலைமைச் செயலகம், 264 வட்டாட்சியர் அலுவலகங்கள், 15 மண்டல அலுவலகங்கள் என 281 இடங்களில் உள்ள அரசு இ- சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கும் வசதி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.
ஆதார் அட்டை பெற ஏற்கனவே விண்ணப்பம் செய்து, கருவிழி மற்றும் கைரேகையை பதிவு செய்து ஒப்புகை சீட்டு பெற்றவர்கள் மேற்கூறிய அரசு இ-சேவை மையங்களுக்கு சென்று, ஒப்புகை சீட்டில் உள்ள 14 இலக்க எண்ணை காட்டி, பிளாஸ்டிக் ஆதார் அட்டையை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு ரூ.40 கட்டணமாக வசூலிக்கப்படும்.
ஏற்கனவே ஆதார் எண் பெற்றவர்கள் பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற விரும்பினால் ஆதார் எண்ணை காட்டி பிளாஸ்டிக் அட்டை பெறலாம். இதற்கு ரூ.30 கட்டணமாக வசூலிக்கப்படும். இதுவரை 3 லட்சத்து 77 ஆயிரத்து 153 பேர் பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற்றுள்ளனர்.
15 இடங்களில்..
சென்னை மாநகராட்சியின் தலைமையிடம் மற்றும் 15 மண்டல அலுவலகங்களில் அமைக்கப்பட்ட அரசு இ-சேவை மையங்கள் மூலம் 38 ஆயிரத்து 14 பேர் சொத்துவரி செலுத்தி யுள்ளனர். இதுவரை ரூ.15 கோடியே 83 லட்சத்து 97 ஆயிரத்து 169 சொத்துவரி இம்மையங்கள் மூலம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.