Last Updated : 11 Jun, 2020 07:26 PM

 

Published : 11 Jun 2020 07:26 PM
Last Updated : 11 Jun 2020 07:26 PM

கர்ப்பிணி உட்பட கோவையில் மேலும் 6 பேருக்கு கரோனா

கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கர்ப்பிணி உட்பட 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அப்பகுதியில் சுகாதாரத்துறையினர் மாதிரிகளைச் சேகரித்துள்ளனர்.

சென்னையிலிருந்து கடந்த 8-ம் தேதி கோவை வந்த, வடவள்ளியை அடுத்த பொம்மனம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞருக்குப் பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர், கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் 6 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு, கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அந்த இளைஞரின் தாயார் மற்றும் எட்டு மாதக் கர்ப்பிணியான அவரது தங்கை ஆகிய இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இருவரும் சிகிச்சைக்காக இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கரோனா உறுதி செய்யப்பட்ட இளைஞர் அப்பகுதியில் சுற்றியுள்ளதால், அங்கு முகாமிட்டு மற்றவர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதவிர, சென்னையிலிருந்து விமானம் மூலம் வந்த கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த 10 வயதுச் சிறுமி, விழுப்புரத்தில் இருந்து வந்த நபருடன் தொடர்பிலிருந்த 37 வயதான பெண், சென்னையிலிருந்து சாலை மார்க்கமாக வந்த பீளமேடு பகுதியைச் சேர்ந்த 37 வயது ஆண், அவரது 32 வயதான மனைவி ஆகியோருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x