Published : 11 Jun 2020 06:57 AM
Last Updated : 11 Jun 2020 06:57 AM

தமிழகத்தில் 2 கோடி குடும்ப அட்டைகளுக்கு தலா 2 முகக் கவசங்கள்

சென்னை

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகளில் அடங்கிய ஒவ்வொருவருக்கும் தலா 2 முகக் கவசங்கள் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, 2 கோடியே8 லட்சத்து 23 ஆயிரத்து 76 குடும்பஅட்டையின் கீழ் வரும், 6 கோடியே74 லட்சத்து 15 ஆயிரத்து 899 உறுப்பினர்களுக்கு தலா 2 முகக் கவசம்வீதம் 13 கோடியே 48 லட்சத்து798 மீண்டும் பயன்படுத்தக் கூடிய முகக் கவசங்கள் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முகக்கவசங்களை கொள் முதல் செய்ய வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில், 7 பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x