Published : 08 Jun 2020 06:51 AM
Last Updated : 08 Jun 2020 06:51 AM
தமிழகம் முழுவதும் 450 போலீஸார் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 73 நாட்களில் ஊரடங்கை மீறி சாலையில் சுற்றித் திரிந்ததாக 5 லட்சத்து 53,431 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 5 லட்சத்து 94,681 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 4 லட்சத்து 53,050 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 10 கோடியே 68 லட்சத்து 13,234 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
போலீஸாருக்கும் கரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், போலீஸார் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் ஐபிஎஸ் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை சுமார் 300 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 450 போலீஸாருக்கு கரோனா பாதிப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிப்பு ஏற்பட்டுள்ள கைதிகளை தனிமைபடுத்தப்பட்ட சிறைகளில் தனி அறைகளில் அடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT