கீழடி அகழாய்வில் வரைபடம் தயாரிக்கும் பணி தொடக்கம்

கீழடியில் விலங்கு எலும்பு கண்டுபிடிக்கப்பட்ட அகழாய்வு குழியின் வரைப்படம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
கீழடியில் விலங்கு எலும்பு கண்டுபிடிக்கப்பட்ட அகழாய்வு குழியின் வரைப்படம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் விலங்கு எலும்பு கண்டுபிடிக்கப்பட்ட அகழாய்வுக் குழுயின் வரைபடம் தயாரிக்கும் பணி தொடங்கியது.

திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் பிப்.19-ம் தேதி ஆறாம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியது. ஊரடங்கால் மார்ச் 24-ம் தேதி அகழாய்வு பணியை தொல்லியல்துறை நிறுத்தியது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்ட நிலையில் மே 20-ம் தேதி மீண்டும் அகழாய்வுப் பணி தொடங்கியது. மணலூரில் சுடுமண்ணால் ஆன உலை, கீழடியில் விலங்கின எலும்பு, கொந்தகையில் முதுமக்கள் தாழியில் மனித எலும்பு கண்டுபிடிக்கப்பட்டன.

இந்நிலையில் கீழடியில் விலங்கு எலும்பு கண்டுபிடிக்கப்பட்ட அகழாய்வு குழியின் வரைப்படம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

தொல்லியல் ஆய்வின் போது எந்த இடத்தில், என்ன பொருள் கிடைக்கிறது என்பதை அதன் அகலம், நீளம் என்ன உள்ளிட்ட தகவலுடன் வரைபடம் அமைப்பது வழக்கம். அந்த வகையில், எத்தனை அடியில் விலங்கு எலும்பு கிடைத்தது உள்ளிட்ட தகவல்களுடன் வரைபடம் வரையும் பணி தொடங்கியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in