Published : 05 Jun 2020 07:03 AM
Last Updated : 05 Jun 2020 07:03 AM

கரோனா அச்சத்தால் பேருந்தில் செல்ல தயக்கம்- பயணிகள் வருகை குறைவு

கரோனா அச்சத்தால் மக்கள் வெளியூர் பயணம் செய்வதைத் தவிர்த்து வருகின்றனர். இதனால், தமிழகத்தில் பிற மாவட்டங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் குறைவான பயணிகளே செல்கின் றனர்.

தமிழகத்தில் ஊரடங்கு சிலதளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களைத் தவிர இதர மாவட்டங்களில் அரசுபோக்குவரத்து கழகங்கள் சார்பில் 8 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மேலும், ஓட்டுநர்கள், நடத்துநர்களின் உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேன் மூலம் பரிசோதனை, முகக் கவசம் வழங்குவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும், கரோனா அச்சத்தால் மக்கள் வெளியூர் பயணம் செய்வதைத் தவிர்த்து வருகின்றனர்.

இதுதொடர்பாக போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அரசின் வழிமுறைகளைப் பின்பற்றி, பேருந்துகளை இயக்கி வருகிறோம். ஒவ்வொரு பேருந்திலும் 60 சதவீத பயணிகளை அழைத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதிப்படி, ஒரு பேருந்தில் 60சதவீதம் என கணக்கீடு செய்தாலும் குறைந்தது 30 பயணிகளாவது பயணம் செய்யலாம். ஆனால், ஒவ்வொரு பேருந்துகளிலும் சராசரியாக 20 பேர் மட்டுமே பயணம் செய்து வருகின்றனர்.

மக்கள் மத்தியில் கரோனா அச்சம் இருப்பதால், வெளியூர்களுக்கு பயணம் செய்வதைத் தவிர்த்து வருகின்றனர். இதனால்,அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அரசு போக்குவரத்து கழகங்கள் சேவை நோக்கத்துடன் செயல்படுவதால், குறைந்த பயணிகள் வந்தாலும், தொடர்ந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x