மக்கள் நீதிமன்றத்தில் 39,715 வழக்குகளுக்கு தீர்வு

மக்கள் நீதிமன்றத்தில் 39,715 வழக்குகளுக்கு தீர்வு
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் நேற்று நடத்தப்பட்ட மக்கள் நீதிமன்றங்களில் (லோக் அதாலத்) சிறு வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், தொழிலாளர் தொடர்பான வழக்குகள் என மொத்தம் 87,044 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

247 அமர்வுகளில் நடத்தப்பட்ட இந்த விசாரணையில், 39,715 வழக்குகளில் சமரசம் மூலம் தீர்வு காணப்பட்டது. இந்த வழக்குகளில் ரூ.154.70 கோடி இழப்பீட்டு தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in