வழிபாட்டுத்தலங்கள் திறப்பு: சமய தலைவர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை

வழிபாட்டுத்தலங்கள் திறப்பு: சமய தலைவர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை
Updated on
1 min read

தமிழகத்தில் சமய வழிபாட்டுத்தலங்களை திறப்பது குறித்து மத்திய அரசின் அறிவிப்பை அடுத்து தலைமைச் செயலர் சண்முகம் தமிழகத்தின் அனைத்து சமயத்தலைவர்களுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

கரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தடுக்க தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், வழிபாட்டுத்தலங்கள், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. இந்த நடைமுறை இந்தியா முழுவதும் அமலுக்கு வந்தது. இதனால் அனைத்து சமய வழிபாட்டுத்தளங்களும் மூடப்பட்டு பொதுமக்கள் ஒன்று கூடுவது தடை செய்யப்பட்டது.

தற்போது 5-ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் வழிபாட்டுத்தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மாநிலங்கள் முடிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.

இதனால் வழிபாட்டுத்தலங்களை திறக்கவும் தனி மனித இடைவெளியுடன் பொதுமக்கள் வர அனுமதிக்கலாம் என பல தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளது. இதுகுறித்து ஆலோசிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதையடுத்து மத அமைப்புகள், சமயத்தலைவர்களுடன் நாளை தலைமைச் செயலர் ஆலோசனை நடத்த உள்ளார். இது குறித்து தலைமைச் செயலர் அனைவருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

அவரது கடித விவரம் வருமாறு:

கரோனா தொற்று பரவலைத்தடுக்கும் பொருட்டு, பொது முடக்கத்தால் மூடப்பட்டுள்ள சமய வழிபாட்டுத்தலங்களை ஜூன் 8 முதல் திறக்கலாம் என மத்திய அரசு அறிவிப்பு செய்துள்ளது.

அதன் அடிப்படையில் கரோனா நிலையை கருத்தில்கொண்டு தமிழ்நாட்டில் உள்ள சமய வழிப்பாட்டுத்தலங்களை எப்போது திறக்கலாம் என்பது பற்றியும், அவ்வாறு திறக்கும்போது கடைபிடிக்கவேண்டிய கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகள் பற்றியும் கருத்துகளை பெற ஜூன் 3 புதன்கிழமை மாலை 4-45 மணிக்கு சென்னை தலைமைச் செயலகம் 2 வது கட்டத்திலுள்ள கூட்ட அரங்கில் சமயத்தலைவர்களுடன் எனது தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைமுறை உள்ளது.

இக்கூட்டத்தில் தவறாமல் கலந்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in