சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா: மொத்தம் பாதிப்பு 34-ஆக உயர்வு

சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா: மொத்தம் பாதிப்பு 34-ஆக உயர்வு
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34-ஆக உயர்ந்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் தொடக்கத்தில் 12 பேர் பாதிக்கப்பட்டு, அனைவரும் குணமடைந்தனர். அதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா, மேற்குவங்கம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த 19 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும் சென்னையில் பரிசோதனை செய்துவிட்டு முடிவு அறிவிப்பதற்குள் காளையார்கோவில் வந்த தீயணைப்பு வீரர் ஒருவருக்கும், புதுக்கோட்டையில் பணிபுரியும் காரைக்குடியைச் சேர்ந்த உளவுப்பிரிவு காவலருக்கும் கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

அவர்கள் அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் 15 பேர் குணமடைந்தனர். மற்றவர்கள் சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில் புதுடெல்லியில் இருந்து விமானத்தில் மதுரை வந்த காரைக்குடியைச் சேர்ந்த 30 வயது ஆண், சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வந்த மானாமதுரையைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி என என 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

காரைக்குடி நபர் சிவகங்கை அரசு மருத்துவமனையிலும், மானாமதுரை மூதாட்டி மதுரை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சிவகங்கை மாவட்டத்தில் பாதிப்பு 34-ஆக உயர்ந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in