Published : 31 May 2020 05:03 PM
Last Updated : 31 May 2020 05:03 PM

போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு ஊதிய குறைப்பு கூடாது: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

கரோனா ஊரடங்கால் பொதுப் பேருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சம்பளக்குறைப்பு அறிவிக்கப்பட உள்ளதாக தவல் வெளியானதை அடுத்து அதை டிடிவி தினகரன் கண்டித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு:

“தமிழக அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஊதியக் குறைப்பு செய்யப்போவதாக கூறப்படுவது கண்டனத்திற்குரியது. இதனைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பணிமனைகளில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.

— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 31, 2020

இதனால் பேருந்து போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதில் சிக்கல் ஏற்படும். எனவே, ஊழியர்களுக்கு முழுமையான ஊதியத்தை வழங்கிட தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x