Published : 31 May 2020 06:48 AM
Last Updated : 31 May 2020 06:48 AM

இ-பாஸை தவறாக பயன்படுத்திய 3 பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதூரை அடுத்த எஸ்.புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜென ரால்டு(25). இ-பாஸ் மூலம் சென்னை சென்ற இவர், நேற்று முன்தினம் திரும்பி வரும்போது, மேலும் 2 பேரை காரில் அழைத்து வந்துள்ளார். கும்பகோணத்தை அடுத்த நீரத்தநல்லூர் சோதனைச் சாவடியில், இதைக் கண்டுபிடித்த போலீஸார், ஜெனரால்டை கைது செய்தனர்.

இதேபோல, சென்னை செல்ல இ-பாஸ் வாங்கிவிட்டு, கூடுதலாக 2 நபர்களை காரில் அழைத்துச் சென்ற கும்பகோணத்தைச் சேர்ந்த நிர்மல்(22), சங்கர்(45) ஆகியோ ரையும் போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் கூறியபோது, “இ-பாஸ்களை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக் கப்படும்” என எச்சரிக்கை விடுத் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x