Last Updated : 30 May, 2020 05:04 PM

 

Published : 30 May 2020 05:04 PM
Last Updated : 30 May 2020 05:04 PM

தூத்துக்குடியில் கரோனா தொற்று 200-ஐ தாண்டியது: குணமடைந்தோர் எண்ணிக்கை 133-ஆக அதிகரிப்பு

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200-ஐ தாண்டியது. மேலும், கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வரை கரோனா தொற்றால் மொத்தம் 199 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று காலை வரை மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200-ஐ தாண்டியுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் 23 பேர் நேற்று மாலையிலும், 6 பேர் இன்று காலையிலும் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x