Published : 30 May 2020 07:24 AM
Last Updated : 30 May 2020 07:24 AM

அரசு அலுவலகங்களுக்கு மத்தியில் தனிமைப்படுத்தப்பட்டோர்- ஊழியர்கள் அதிருப்தி

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சில வாரங்களுக்கு முன்பு அழைத்து வரப்பட்டனர்.

அவர்களுக்கு எடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 19 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

அவர்களில் பலர் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தனர். 5 பேர் மருத்துவமனையில் தொடர் சிகிச் சையில் உள்ளனர்.

இந்நிலையில், மருத்துவப் பரிசோதனையில் கரோனா பாதி ப்பு இல்லாதவர்கள் காரைக் குடி அமராவதிப்புதூர், சிவகங்கை சமுதாயக் கூடம், மன்னர் துரை சிங்கம் அரசு கலைக் கல்லூரி, அரசு விடுதிகளில் தங்க வைக் கப்பட்டுள்ளனர்.

இதில் சிவகங்கை சமுதாயக் கூடம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ளதால் அரசு அலுவலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்களை மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதிகளில் தங்க வைக்க வேண் டுமென கோரிக்கை விடுத்துள் ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x