Published : 30 Aug 2015 11:07 AM
Last Updated : 30 Aug 2015 11:07 AM

காவிரியில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி

கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்தவர் ஆஷிக். திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் எம்.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருடன் கல்லூரியில் அரபி படிக்கும் விடுதி நண்பர்கள் 15 பேரை விருந்துக்காக நேற்று வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

குளித்தலை கடம்பர் கோயில் பகுதியில் காவிரி ஆற்றில் அவர்கள் நேற்று குளிக்கும்போது, தென்காசியைச் சேர்ந்த அக்பர் அலி(20), திண்டுக்கல்லைச் சேர்ந்த நசுருதீன்(20) ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தனர். மேலும், கரூர் மாவட்டம் பள்ளபட்டியைச் சேர்ந்த சித்திக் அலி(21) நீரில் மூழ்கினார். அவரை காப்பாற்றி, குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவர் எம்.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இதுகுறித்து குளித்தலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x