Last Updated : 29 May, 2020 06:40 PM

 

Published : 29 May 2020 06:40 PM
Last Updated : 29 May 2020 06:40 PM

காரைக்குடியைச் சேர்ந்த உளவுப்பிரிவு காவலருக்கு கரோனா

புதுக்கோட்டையில் பணிபுரியும் காரைக்குடியைச் சேர்ந்த உளவுப்பிரிவு காவலருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 32-ஆக அதிகரித்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூரில் 9 பேர், இளையான்குடி, தேவகோட்டை, காரைக்குடியில் தலா ஒருவர் என 12 பேருக்கு ஏற்கனவே கரோனா தொற்று இருந்தது. அவர்கள் அனைவரும் குணமடைந்ததால் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாறியது.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மகாராஷ்டிரா, மேற்குவங்கம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து அழைத்து வரப்பட்டனர்.

அவர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் மகாராஷ்டிரா, மேற்குவங்க மாநிலங்களில் இருந்து வந்த 19 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும் சென்னையில் இருந்து காளையார்கோவில் வந்த தீயணைப்புத்துறை வீரருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதில் 15 பேர் குணமடைந்தனர்.

இந்நிலையில் காரைக்குடியைச் சேர்ந்த உளவுப்பிரிவு காவலர் புதுக்கோட்டையில் பணிபுரிகிறார்.

அவருக்கு இன்று கரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32-ஆக அதிகரித்துள்ளது. தற்போது 6 பேர் சிகிச்சையில் உள்ளனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x