

இதுகுறித்து அவர் நேற்று வெளி யிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 24 முதல் மாநில பேரிடர் மேலாண்மை சட்டப் படி ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை முன்கூட் டியே அறிந்து, நிவாரணம் வழங்க ஊரடங்கு உத்தரவுக்கு முன்ன தாகவே ரூ.3,280 கோடி மதிப்பில் சிறப்பு நிவாரணத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி, ஏப்ரல் மாதத்தில் 2 கோடியே 1 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 மற்றும் இலவச அரிசி, சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய் வழங்கப்பட்டன.
ஊரடங்கு தொடர்ந்ததால், மே மாதத்திலும் 1 கோடியே 84 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்துக்கான பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
மேலும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நபர் ஒன்றுக்கு கூடுதலாக 5 கிலோ வீதம், ஏப்ரல் முதல் ஜூன் முடிய 3 மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க உத்தரவிடப்பட்டது. அதன் படி, உறுப்பினர்கள் எண்ணிக் கையை பொறுத்து, கூடுதலான அரிசியும், 4 மற்றும் அதற்கு மேற் பட்ட உறுப்பினர்கள் இருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒவ் வொரு மாதமும் வழங்கப்படும் அரிசியை இரு மடங்காக உயர்த்தி யும் 3 மாதங்களுக்கு வழங்கப்படு கிறது.
மேலும், தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதத்துக்கான அத்தியாவசியப் பொருட்களான சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதல் அரிசியுடன் எப்போதும் வழங்கப் படும் அரிசி ஆகியவை இலவச மாக வழங்கப்படும்.
இவ்வாறு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி, சர்க்கரை, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றை 3 மாதங்களாக தொடர்ந்து வழங்கி, மக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்தது, இந்திய மாநிலங் களில் தமிழகம் மட்டுமே ஆகும்.
நோய் தொற்று ஏற்படாத வண் ணம் இந்தப் பொருட்கள் பாதுகாப் பாக அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன், மே 29 (நாளை) முதல் 31-ம் தேதி வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும். அதில் பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும்.
அதன்படி நியாயவிலைக் கடை களுக்குச் சென்று ஜூன் 1-ம் தேதி முதல் அத்தியாவசியப் பொருட் களை பெற்றுக் கொள்ளலாம். பொதுமக்கள் முகக் கவசம் அணிந் தும் சமூக இடைவெளியைக் கடைபிடித்தும் தங்களுக்குரிய பொருட்களை இலவசமாக பெற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு முதல்வர் தெரிவித்து உள்ளார்.ஜூன் 5-ம் தேதி கடைகள் செயல்படும்
வழக்கமாக மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை நியாயவிலைக் கடைகளுக்கு விடுமுறை நாளாகும். தற்போது, கரோனா காரணமாக டோக்கன் வழங்கப்பட்டு, அதன் மூலம் பொருட்கள் விநியோகம் நடைபெறுவதால், ஜூன் 5-ம் தேதி விடுமுறை இல்லாமல், கடைகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதில் ஜூன் 19-ம் தேதி வெள்ளிக்கிழமையன்று நியாயவிலைக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக உணவுத் துறை அறிவித்துள்ளது.