‘திருமணம் எனும் நிக்காஹ்’ படத்தின் தயாரிப்பாளருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

‘திருமணம் எனும் நிக்காஹ்’ படத்தின் தயாரிப்பாளருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
Updated on
1 min read

ஜெய், நஸ்ரியா நடித்துள்ள ‘திருமணம் எனும் நிக்காஹ்’ திரைப் படத்தை அனீஸ் இயக்கியுள்ளார். படத்தை விரைவில் வெளியிட ஆஸ்கார் ரவிச்சந்திரன் திட்டமிட் டுள்ளார். இந்நிலையில், படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி முஸ்லிம் அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

‘திருமணம் எனும் நிக்காஹ்’ படத்தில் ஷியா முஸ்லிம் சமுதாயத்தின் மதக் கொள்கை அவதூறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இப்படம் வெளிவந்தால், மத மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது. படத்தில் முஸ்லிம்களை விமர்சனம் செய்துள்ளார். எனவே, அவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை மாநகர காவல் ஆணையரிடம் சமீபத்தில் புகார் கொடுத்தோம். அதன்மீது, இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே ‘திருமணம் எனும் நிக்காஹ்’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். ரவிச்சந்திரன் மீது குற்ற வழக்கு பதிவு செய்ய மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி அடுத்த 2 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி படத் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன், மத்திய தணிக்கை வாரிய மண்டல அதிகாரி, மாநகர காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

தயாரிப்பாளர் விளக்கம்

பட சர்ச்சை குறித்து ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் கூறுகையில், ‘‘படத்துக்கு தணிக்கைக் குழு ‘யு’ சான்றிதழ் தந்துள்ளது. குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தி படம் எடுத்திருந்தால் தணிக்கைக் குழு அனுமதிக்குமா? இது இஸ்லாம் மதத்துக்கு பெருமை சேர்க்கும் படம். படத்தை இயக்கியவர், இசை யமைத்தவர், குறிப்பிட்ட நடிகர்கள் எல்லோரும் இஸ்லாம் மதத்தை சார்ந்தவர்கள். படம் வெளிவரும் முன்பே அவதூறாக கூறி யாரும் விளம்பரம் தேடக்கூடாது.திட்ட மிட்டபடி படம் வெளிவரும். எப்போது ரிலீஸ் என்பதை சனிக் கிழமை அறிவிப்போம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in