பரிசோதனை முடிவு வருவதற்குள் சென்னையில் இருந்து காளையார்கோவில் வந்த தீயணைப்பு ஊழியருக்கு கரோனா

பரிசோதனை முடிவு வருவதற்குள் சென்னையில் இருந்து காளையார்கோவில் வந்த தீயணைப்பு ஊழியருக்கு கரோனா
Updated on
1 min read

பரிசோதனை முடிவு வருவதற்குள் சென்னையில் இருந்து சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வந்த தீயணைப்புத்துறை ஊழியருக்கு கரோனா இருப்பது தெரியவந்தது.

சிவகங்கை மாவட்டத்தில் சில வாரங்களுக்கு முன்பு, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மகாராஷ்டிரா, மேற்குவங்கம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து அழைத்து வரப்பட்டனர். அவர்கள் காரைக்குடி அமராவதிப் புதூர் , சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் தங்க வைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு ஏற்கெனவே எடுக்கப்பட்ட பரிசோதனையில் மகாராஷ்டிரா, மேற்குவங்க மாநிலங்களில் இருந்து வந்த 17 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதில் நேற்று வரை 14 பேர் குணமடைந்தனர்.

இந்நிலையில் இன்று சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகே கருங்காப்பட்டியைச் சேர்ந்த 65 வயது ஆண், மானாமதுரை அருகே டி.ஆலங்குளத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் என 2 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் காளையார்கோவிலைச் சேர்ந்த 25 வயது இளைஞர் சென்னை தீயணைப்புத்துறையில் பணிபுரிந்து வந்தார். நேற்றுமுன்தினம் அவருக்கு பிசிஆர் பரிசோனை எடுக்கப்பட்டது. முடிவு அறிவிப்பதற்குள் அவர் மோட்டார் சைக்கிளில் சொந்த ஊரான காளையார்கோவிலுக்கு வந்தார். இன்று முடிவு வெளியானநிலையில் அவருக்கு கரோனா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சென்னை சுகாதாரத்துறையினர் அந்த தீயணைப்புத்துறை ஊழியரை தொடர்பு கொண்டு, அரசு மருத்துவமனையில் சேருமாறு வலியுறுத்தினர். இதையடுத்து அவர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in