குமரியில் இருந்து சிறப்பு ரயிலில் 515 பேர் உத்தரப் பிரதேசம் அனுப்பி வைப்பு

நாகர்கோவிலில் இருந்து இன்று ரயிலில் அனுப்பி வைக்கப்பட்ட உத்திர பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
நாகர்கோவிலில் இருந்து இன்று ரயிலில் அனுப்பி வைக்கப்பட்ட உத்திர பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
Updated on
1 min read

குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்து வந்த உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 515 பேர் இன்று ரயில் மூலம் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

குமரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து இங்கு தங்கியிருக்கும் புலம் பெயர்ந்த் தொழிலாளர்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் தவித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி இதுவரை ஆயிரக்கணக்கானோர் உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், மேற்கு வங்காளம் போன்ற பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 515 பேர் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு அங்கிருந்து அரசு பஸ் மூலம் ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் இவர்கள் அங்கிருந்து சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in