Last Updated : 27 May, 2020 03:35 PM

 

Published : 27 May 2020 03:35 PM
Last Updated : 27 May 2020 03:35 PM

தூத்துக்குடி கரோனா நிலவரம்: 8 பேர் குணமடைந்தனர்; புதிய பாதிப்பு 6

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் 8 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது. இதேநேரத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை 193 ஆக அதிகரித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வரை கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 187 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 193 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர்.

மேலும், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 76 பேர் ஏற்கனவே குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8 பேர் குணமடைந்ததை தொடர்ந்து இன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மருத்துவமனை டீன் ரேவதி பாலன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி ஆகியோர் பங்கேற்று, குணமடைந்தவர்களுக்கு பழக்கூடைகளை வழங்கி அனுப்பி வைத்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x