சிவகங்கை அரசு மருத்துவமனையில் கரோனாவில் இருந்து குணமடைந்தவரை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் வீட்டிற்கு வழியனுப்பி வைத்தார். அருகில் மருத்துவ கல்லூரி டீன் ரத்தினவேல்.
சிவகங்கை அரசு மருத்துவமனையில் கரோனாவில் இருந்து குணமடைந்தவரை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் வீட்டிற்கு வழியனுப்பி வைத்தார். அருகில் மருத்துவ கல்லூரி டீன் ரத்தினவேல்.

சிவகங்கை மாவட்டத்தில் ஒருவர் குணமடைந்தார்: சிகிச்சையில் மூன்று பேர்

Published on

சிவகங்கை மாவட்டத்தில் ஒருவர் குணமடைந்தார். மொத்தம் பாதிக்கப்பட்ட 29 பேரில், தற்போது மூவர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூரில் 9 பேர், இளையான்குடி, தேவகோட்டை, காரைக்குடியில் தலா ஒருவர் என 12 பேருக்கு ஏற்கனவே கரோனா தொற்று இருந்தது. அவர்கள் அனைவரும் குணமடைந்ததால் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாறியது.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 700 -க்கும் மேற்பட்டோர் மகாராஷ்டிரா, மேற்குவங்கம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து அழைத்து வரப்பட்டனர். அவர்கள் காரைக்குடி அமராவதிப் புதூர் , சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் தங்க வைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் மகாராஷ்டிரா, மேற்குவங்க மாநிலங்களில் இருந்து வந்த 17 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் ஏற்கனவே 13 பேர் குணமடைந்தனர்.

நேற்று காரைக்குடியைச் சேர்ந்த 27 வயது பெண் குணமடைந்தார். அவரை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் வீட்டிற்கு வழியனுப்பி வைத்தனர்.

இதில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ரத்தினவேல், நிலைய மருத்துவ அலுவலர்கள் மீனா, முகமதுரபீக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மொத்தம் பாதிக்கப்பட்ட 29 பேரில், 26 பேர் குணமடைந்ததால், தற்போது மூவர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in