Last Updated : 26 May, 2020 07:25 PM

 

Published : 26 May 2020 07:25 PM
Last Updated : 26 May 2020 07:25 PM

கூடங்குளம் 2-வது அணுஉலையில் மீண்டும் மின்உற்பத்தி

திருநெல்வேலி

கூடங்குளம் 2-வது அணுஉலையில் பழுது நீக்கப்பட்டதை அடுத்து 5 நாட்களுக்குப்பின் இன்று மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது.

இந்த அணுஉலையில் ஜெனரேட்டரில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணிக்காக ரஷ்ய தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவினர் தனி விமானத்தில் மதுரைக்கு வந்து அங்கிருந்து கூடங்குளத்துக்கு காரில் வந்திருந்தனர்.

இப்பணிக்காக கடந்த 21-ம் தேதி அணுஉலையில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. கடந்த 5 நாட்களாக பழுதுநீக்கும் பணிகளும், பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இப்பணிகள் நிறைவுற்றதை அடுத்து நேற்று மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது.

இன்று பிற்பகல் 3 மணியளவில் மின்உற்பத்தி 300 மெகாவாட்டை எட்டியிருந்தது. இந்த அளவு படிப்படியாக அதிகரிக்கும் என்று தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x