Published : 26 May 2020 09:38 AM
Last Updated : 26 May 2020 09:38 AM

இன்று 19 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தேனி, தென்காசி மாவட்டங்களில் மழை பெய்யும்.

விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது, இதில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று கரூர், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, திருச்சி, மற்றும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அதிகபட்ச வெப்ப நிஅலி 42 டிகிரி செல்சியஸாக இருக்கும். எனவே அடுத்த 2 நாட்களுக்கு அனல்காற்று வீசும்.

இந்த மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் 11.30 முதல் 3.30 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.

மே-4ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் நாளை முடிவுக்கு வருகிறது. சென்னையில் அதிகபட்ச வெயில் நேற்று 39 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. சென்னையில் செவ்வாய்க்கிழமை அதிகபட்ச வெப்ப நிலை 37 டிகிரி செல்சியஸாக இருக்கும்.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x