கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை தடுக்க வேண்டும்: அகில இந்திய கட்டுநர் சங்கம் வலியுறுத்தல்

கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை தடுக்க வேண்டும்: அகில இந்திய கட்டுநர் சங்கம் வலியுறுத்தல்
Updated on
1 min read

கட்டுமானப் பொருட்களின் செயற்கையான விலையேற்றத்தை தடு்க்க முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய கட்டுநர் சங்கத் மாநிலத் தலைவர் ஆர்.பிரகாஷ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து முதல்வருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதம்:

கட்டுமானத் துறையினருக்குச் சேரவேண்டிய அனைத்து நிலுவைத் தொகையும் 45 நாட்களுக்குள் வழங்கப்படும் என்று மத்தியநிதி அமைச்சர் உறுதி அளித்தார். எனவே, மாநில அரசுப் பணிகளில்ஒப்பந்ததாரர்களுக்குச் சேரவேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க முதல்வர் உத்தரவிட வேண்டும்.

கரோனா ஊரடங்கால் 2 மாதங்களுக்குப் பிறகு இப்போது வேலையைத் தொடங்கும் நிலையில் சிமென்ட், இரும்புக் கம்பி, ஜல்லி,எம்-சாண்ட் மற்றும் இதர கட்டுமானப் பொருட்களின் விலை20 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இந்த செயற்கையான விலையேற்றத்தை உடனடியாக தடுக்க வேண்டும். மேலும், சிமென்ட்டுக்கான ஒழுங்குமுறை ஆணையத்தை விரைவில் ஏற் படுத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in