Published : 24 May 2020 08:17 AM
Last Updated : 24 May 2020 08:17 AM

கரோனா அச்சத்தால் கடலிலேயே 2 மாதம் தங்கிய 20 மீனவர்கள் ஊர் திரும்பினர்

ராமேசுவரம்

கடந்த மார்ச் 23-ம் தேதிக்கு முன்பு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 மீனவர்கள், 2 விசைப் படகுகளில் லட்சத் தீவுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்புக்காகச் சென்றனர்.

கரோனா அச்சத்தால் அவர்கள் கடல் வழியாகவே கடலூர் செல் வதற்காக, ராமேசுவரம் அருகே பாம்பன் மன்னார் வளைகுடா கடற் பகுதியில் பாம்பன் ரயில் பாலம் திறப்பதற்காக கடந்த 15 நாட்களாக காத்திருந்தனர்.

நேற்று பிற்பகல் ராமநாதபுரம் ஆட்சியர் கொ.வீரராகவராவ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தூக்குப் பாலத்தை திறக்க அனுமதி அளித்தார். இதையடுத்து பாம்பன் தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் 2 ஆழ்கடல் மீன்பிடி விசைப் படகுகளில் காத்திருந்த 20 மீனவர்களும் தூக்குப் பாலத்தை கடந்து கடலூர் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x