Last Updated : 22 May, 2020 04:02 PM

 

Published : 22 May 2020 04:02 PM
Last Updated : 22 May 2020 04:02 PM

மேலும் 9 பேருக்கு தொற்று உறுதி, இருவர் குணமடைந்தனர்: தூத்துக்குடியில் கரோனா பாதிப்பு 144 ஆக அதிகரிப்பு

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 144 ஆக உயர்ந்துள்ளது. 2 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கரோனா தொற்றால் 135 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 2 பேர் உயிரிழந்துவிட்டனர். 34 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பிவிட்டனர். மற்றவர்கள் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் மாவட்டத்தில் இன்று மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 144 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவில்பட்டி ஆத்திக்குளத்தை சேர்ந்த 2 பேர் குணமடைந்ததை தொடர்ந்து, இன்று வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x