Published : 22 May 2020 07:58 AM
Last Updated : 22 May 2020 07:58 AM

சென்னை விமான நிலையம், திருத்தணியில் 43 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு: 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும்

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் இன்றும் நாளையும் அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

திருவள்ளூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் இன்று 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை பதிவாக வாய்ப்புள்ளது.

நேற்று கொளுத்தி எடுத்த வெயில்:

நேற்று 13 இடங்களில் வெயில் கடுமையாகப் பதிவாகியுள்ளது. சென்னை விமான நிலையம் மற்றும் திருத்தணியில் 43 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகபட்சமாக பதிவாகியது.

சென்னை நுங்கம்பாக்கம், திருச்சி, பரமத்தி, கரூர், மதுரை, தர்மபுரி, கடலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் 40-41 டிகிரி வெயிலும் சேலம், நாமக்கல்லில் 39 டிகிரியும் , நாகை 38, பாளையங்கோட்டை 37 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

வெப்பச் சலனம் மற்றும் கேரளாவை ஒட்டிய பகுதிகளில் மேலடுக்குச் சுழற்சி நிலவுவதால் கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

மன்னார் வளைகுடா, குமரிக்கடல் , தென் கிழக்கு அரபிக்கடல், அதையொட்டிய கேரளா கடல் பகுதிகளில் மணிக்கு 50 கிமீ காற்று வீசும். 4 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

உம்பன் புயல் தாக்கத்தினால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப நிலை அதிகமாகக் காணப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தின் வடமாவட்டங்கள், புதுச்சேரி, ஆந்திரா, வடக்கு கர்நாடகா, தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் அனல்காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x