கூடங்குளம் 2-வது அணுஉலையில் மின்உற்பத்தி நிறுத்தம்

கூடங்குளம் 2-வது அணுஉலையில் மின்உற்பத்தி நிறுத்தம்
Updated on
1 min read

கூடங்குளத்தில் 2-வது அணுஉலையில் பராமரிப்பு பணிகளுக்காக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இப்பணிகளில் ரஷ்ய தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபடுகிறார்கள்.

கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறனுள்ள 2 அணுஉலைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில் 2-வது அணுஉலையில் ஜெனரேட்டர் பகுதியில் தேவையற்ற அதிர்வுகள் ஏற்படுவதால் முழுஅளவில் மின்உற்பத்தி மேற்கொள்ளப்படாமல் இருந்துவந்தது.

இந்த கோளாறை சரிசெய்ய ரஷ்ய தொழில்நுட்ப வல்லுநர்கள் நேற்று முன்தினம் தனிவிமானத்தில் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

இந்த வல்லுநர்கள் குழுவினர் நேற்று பராமரிப்பு பணிகளை தொடங்கினர். இதற்காக அணுஉலையில் பிற்பகல் 2 மணியிலிருந்து மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

இப்பணிகள் தொடர்ந்து ஒருவாரம் மேற்கொள்ளப்பட்டு, அதன்பின் மின்உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in