Published : 21 May 2020 07:07 AM
Last Updated : 21 May 2020 07:07 AM

வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்துகளில் நகராட்சி அலுவலர் உள்ளிட்ட 4 பேர் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, ஒரகடம் ஆகிய இடங்களில் நடைபெற்ற சாலை விபத்தில் நகராட்சி அலுவலர் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர்

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் தமிழ்செல்வி (55). இவர், காஞ்சிபுரம் நகராட்சியில் வருவாய் அலுவலராக பணியாற்றி வந்தார். மேலும் அம்மா உணவக பொறுப்புகளையும் கவனித்து வந்தார்.

இவர் தம் அலுவலகத்தில் பணியாற்றிவரும் பில் கிளார்க் சுப்புலட்சுமி என்பவருடன் ஸ்கூட்டரில் நேற்று முன்தினம் தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்றார். அப்போது வண்டலூர் - வாலாஜாபாத் சாலையில் நிலை தடுமாறி ஸ்கூட்டரில் இருந்து இருவரும் கீழே விழுந்தனர்.

இதில், தலையில் பலத்த காயமடைந்த தமிழ்செல்வி வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார். சுப்புலட்சுமி லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். ஒரகடம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

இதேபோல் ஸ்ரீபெரும்புதூர் அருகே மொளச்சூர் பகுதியை சேர்ந்தவர் தங்கராணி (36) தன்னுடைய கணவர் அந்தோணியுடன் பைக்கில் ஸ்ரீபெரும்புதூர் சென்றார். மாம்பாக்கம் அருகே சென்றபோது மற்றொரு பைக் மோதியதில் கீழே விழுந்ததங்கராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம்(45) இருங்காட்டுகோட்டையில் தனியார் கம்பெனியில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவர் லாரியில் கம்பெனிக்கு செல்லும்போது ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே சாலை தடுப்பில் லாரி டயர் உரசியது. மாணிக்கம் லாரியில் அமர்ந்தபடியே வெளியே எட்டிப்பார்த்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த 2 சம்பவம் தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு ஜே.சி.கே நகரை சேர்ந்தவர் இந்தர்சாந்புரட்(64) நேற்று முன்தினம் தன்னுடைய பைக்கில் கடைக்கு சென்றபோது பின்னர் வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x