Last Updated : 20 May, 2020 04:23 PM

 

Published : 20 May 2020 04:23 PM
Last Updated : 20 May 2020 04:23 PM

மும்பையில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்துக்குத் திரும்பிய 5 பேருக்கு கரோனா

மும்பையில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்துக்குத் திரும்பிய 5 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை பகுதியில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்துக்கு 2 தினங்களுக்கு முன்பு திரும்பிய 42 பேரை கறம்பக்குடி மற்றும் காட்டாத்தி ஆகிய அரசுப் பள்ளிகளில் தங்க வைத்துப் பரிசோதித்தனர்.

இதில், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் என மொத்தம் 5 பேரும் புதுக்கோட்டை டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு அரசு மருத்துவமனையில், மாநிலத்தில் முன்மாதிரியாக அமைக்கப்பட்டுள்ள கோவிட் நலவாழ்வு மையத்தில் இன்று (மே 20) சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். இம்மையத்தில், ஏற்கெனவே ஒருவர் சிகிச்சையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x