Published : 18 May 2020 07:35 AM
Last Updated : 18 May 2020 07:35 AM

தேசிய சுங்கச்சாவடிகளில் செயல்படாத பாஸ்டேக் அட்டையுடன் வரும் வாகனங்களுக்கு 2 மடங்கு கட்டணம்

சென்னை

செல்லாத அல்லது செயல்படாத பாஸ்டேக் அட்டையுடன் தேசிய சுங்கச்சாவடிகளில் வரும் வாகனங்களுக்கு 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம், தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதிகள் 2008-ல் திருத்தம் செய்து 2020 மே 15 தேதியிட்ட அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, பாஸ்டேக் ஒட்டாத அல்லது செல்லாதது அல்லது செயல்படாத பாஸ்டேக் அட்டையுடன் வரும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் இயல்பு கட்டணத்தை விட, 2 மடங்கு கட்டணம் வசூலிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு மட்டும், பாஸ்டேக் பாதையில் நுழைந்தால் 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x