Published : 18 May 2020 07:16 AM
Last Updated : 18 May 2020 07:16 AM

மத்திய அரசின் சுயசார்பு பாரத திட்டத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 1,109 மெட்ரிக் டன் அரிசி- முதன்முதலாக தமிழகத்துக்கு ஒதுக்கீடு

கரோனா ஊரடங்கால் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், சுயசார்பு பாரத திட்டத்தின் கீழ், மே மற்றும் ஜுன் மாதத்தில் ஒவ்வொருவருக்கும் தலா 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

இத்திட்டத்தின்கீழ், தமிழகத்தில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக 2 மாதத்துக்கு மொத்தம் 35,734மெட்ரிக் டன் அரிசி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகத்துக்கு முதல்கட்டமாக 1,109 மெட்ரிக் டன் அரிசியை இந்திய உணவுக் கழகம் நேற்று முன்தினம்வழங்கி உள்ளது. இத்திட்டத்துக்காக இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில் அரிசி இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக உணவுக் கழகத்தின் தலைமை மேலாண் இயக்குநர் டி.வி.பிரசாத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x