Published : 18 May 2020 07:13 AM
Last Updated : 18 May 2020 07:13 AM
சென்னையில் இதுவரை 2 லட்சம் முகக் கவசங்கள் இலவச மாக வழங்கப்பட்டுள்ளதாக சிறப்பு அதிகாரி ஜெ.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலம் 58, 59-வதுவார்டு பகுதிகளில் கரோனாதடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வுசெய்தார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு முகக் கவசங்களைஇலவசமாக வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க முகக் கவசம் அணிவது மிகவும் இன்றியமையாதது. அதன்படி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட குடிசை பகுதிகளில் வாழும்26 லட்சம் மக்களுக்கு 50 லட்சம் முகக்கவசங்கள் வழங்கும்பணிதொடங்கப்பட்டுள்ளது. இதுவரை 2 லட்சம் முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ராயபுரம் மண்டலத்தில், தொற்று அதிகமாக உள்ள 10 பகுதிகளில் சிறப்பு குழுக்கள் மூலம் கரோனா தடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பகுதிகளில் கபசுரக் குடிநீர், மூலிகை குடிநீர் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு ஜெ. ராதாகிருஷ் ணன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT