Published : 16 May 2020 07:42 AM
Last Updated : 16 May 2020 07:42 AM

கோடை காலத்துக்கு தேவையான மின்சாரம் உள்ளது: அமைச்சர் தங்கமணி தகவல்

கோடை காலத்துக்கு தேவையான 17 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உள்ளது, என தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி தெரிவித்துள்ளார்.

திருச்செங்கோடு நகராட்சி கரட்டுப்பாளையம் 31-வது வார்டில் அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பங்கேற்ற அமைச்சர் பி. தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோடை காலத்துக்கு தேவையான மின் அளவான 17 ஆயிரம் மெகாவாட் தமிழக அரசின் வசம் உள்ளது. ஊரடங்கு காலத்தினால் தேவை 13 ஆயிரம் மெகாவாட்டாகத் தான் உள்ளது. இதனால், நெய்வேலியில் உற்பத்தி பாதித்தாலும், விநியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லை. மின்வாரியப் பணிகளுக்கு 3 சதவீதம் மாற்றுத்திறனாளிகளை தொடர்ந்து பணியமர்த்துவது வழக்கமாக உள்ளது தான். கேங்மேன் பணிக்கான தேர்வு நடந்துள்ளது. முடிவுகள் வெளியானவுடன் பணி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x