Published : 16 May 2020 07:23 AM
Last Updated : 16 May 2020 07:23 AM

குடியரசுத் தலைவரைப்போல சிக்கனத்தைப் பின்பற்றுங்கள்: கிரண்பேடி

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வாட்ஸ் அப் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளதாவது: புதுச்சேரியில் உள்ள அனைத்து துறைகளும் சேமிப்பு மற்றும் செலவுகளை குறைத்தல் என குடியரசுத் தலைவரின் சிக்கன நடவடிக்கையை பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்துகிறேன். நடப்பாண்டு திட்டமிடப்பட்ட ஊதியம், ஓய்வூதியம், சுகாதாரம், கல்வி, ஏழைகளுக்கு இலவச அரிசி போன்றவற்றின் அடிப்படையில் செலவுகள் இருக்க வேண்டும். இதுவரை பணத்தை இழந்து வரும் சேவைகளில் இருந்து வருமானத்தை திரட்ட வேண்டும்.

குடியரசுத் தலைவர் மாளிகையை போல புதுச்சேரி ராஜ்நிவாஸும் அனைத்து செலவுகளிலும் கடுமையான கட்டுப்பாட்டை முழுமையாக பின்பற்றும். எனது மாத ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்கு பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக தரப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x